இலங்கை: துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயம்
 
																																		மாளிகாவத்தை லக்ஹிரு செவன அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அருகில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று இரவு (22) இடம்பெற்றுள்ளது.
அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அருகில் உந்துருளியில் பிரவேசித்த இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
காயமடைந்தவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(Visited 18 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
