இலங்கை

இலங்கை : 2021 ஆம் ஆண்டு முதல் காணாமல் போன T56 துப்பாக்கியுடன் கடற்படை சிப்பாய் கைது

கடற்படை மற்றும் குளியாப்பிட்டிய பொலிஸார் இணைந்து இன்று (16) அதிகாலை இலுகேன பிரதேசத்தில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது T56 துப்பாக்கியுடன் கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலிகேன, கல்பொல காலனியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் சந்தேகநபர் பொறுப்பேற்றிருந்த கொழும்பு துறைமுகத்தின் ரன்வல முகாமில் உள்ள ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து 2021 இல் காணாமல் போன துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகளுக்காக வெலிசர கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிப்பாய் மேலதிக விசாரணைகளுக்காக குளியாப்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

(Visited 7 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!