இலங்கை

இலங்கை: போதைப்பொருள் பிரச்சனைக்கு எதிராக இளைஞர்களை ஊக்கப்படுத்துவது தேசத்தின் கடமை: பிரதமர்

சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் மனங்களில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் போதைப்பொருள் பிரச்சனைக்கு எதிராக போராடுவது நாட்டின் பொறுப்பாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை கலை மற்றும் அனிமேஷன் காணொளிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு, பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளைத் தூண்டுவதன் மூலம் நாட்டின் எதிர்காலத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் தேசிய மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு சட்ட அமலாக்க முயற்சிகள் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இலங்கை கடற்படை மற்றும் பாதுகாப்புப் படையினரின் சேவைகளைப் பாராட்டிய பிரதமர், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை எதிர்த்துப் போராடுவதற்கும், அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கும் ஒரு வேலைத்திட்டத்தின் அவசரத் தேவையை எடுத்துரைத்தார்.

போதைப்பொருளின் தீமைகள் பற்றி அவர்களுக்கு தெரிவிப்பதோடு, அவர்களின் ஆக்கப்பூர்வமான திறமைகளை வெளிக்கொணரும் சந்தர்ப்பங்களை வழங்குவதன் மூலம் வலுவான எதிர்காலத்தை கட்டியெழுப்ப குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்றும் பிரதமர் அமரசூரிய தெரிவித்தார்.

(Visited 3 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்