இலங்கை

இலங்கை நாரம்மல துப்பாக்கிச்சூட்டு சம்பவம் : உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்கமறியல்

நாரம்மல பிரதேசத்தில் இளைஞன் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நாரம்மல நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகரை இன்று (23) ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரன்முத்துகல, நாரம்மலையில் கடந்த 18 ஆம் திகதி லொறியை சோதனை செய்து கொண்டிருந்த போது, பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர். 3 பிள்ளைகளின் தந்தையான 41 வயதான ரொஷான் குமாரதிலக்க என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குளியாபிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த இந்தச் சம்பவம், சட்ட அமலாக்கப் பிரிவினர் பலாத்காரத்தைப் பயன்படுத்துவது குறித்த கவலையை எழுப்பியுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்