இலங்கை: ஒன்றரை வயதுக் குழந்தையுடன் தீ வைத்துக் கொண்ட மூன்று குழந்தைகளின் தாய்!

தம்புள்ளை கண்டலம பகுதியில் தாய் ஒருவர் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையுடன் தீ வைத்துக் கொண்டுள்ளார்.
குறித்த பெண் 3 பிள்ளைகளின் தாய் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
தீக்காயத்திற்குள்ளான பெண்ணுக்கும், கணவருக்கும் இடையில் ஏற்படும் தகராறின் காரணமாக பல்வேறு சந்தர்ப்பங்களில் மன உளைச்சலுக்குள்ளாகியதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் காயமடைந்த தாய் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடுமையான தீக்காயங்களுக்குள்ளான குழந்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தாய்க்கு 7 வயதும், 9 வயதுமுடைய இரு பிள்ளைகளும் உள்ளனர்.
(Visited 2 times, 2 visits today)