இலங்கை

இலங்கை : பிரதமர் – கனேடிய உயர்ஸ்தானிகர் இடையே சந்திப்பு

இலங்கை மற்றும் கனடா இடையிலான இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்கான கனடாவின் உறுதிப்பாட்டை இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ்(Eric Walsh) மீண்டும் வலியுறுத்தினார்.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று(23) இந்த சந்திப்பு நடைபெற்றது.

இலங்கையின் சமூகப் பாதுகாப்பு முறைமையை வலுப்படுத்துதல், பெண்களின் தொழில்முயற்சியை ஊக்குவித்தல் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சித் துறையின் முக்கியத்துவம் உட்பட அபிவிருத்தியின் முக்கிய பகுதிகள் குறித்து இக்கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

நாட்டின் அபிவிருத்திக்கு கல்விக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி உள்ளிட்ட பலர் பிரசன்னமாகியிருந்தனர்.

(Visited 2 times, 2 visits today)
See also  இலங்கை மக்களுக்கு இராணுவ தலைமையகம் விடுத்த கோரிக்கை
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content