May 9, 2025
Breaking News
Follow Us
இலங்கை

இலங்கை – 8 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விடுத்துள்ளது.

இன்று (02) மாலை 05 மணி முதல் நாளை (03) மாலை 05 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு 02 ஆம் நிலையின் கீழ் இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்கள, கண்டி மாவட்டத்தில் உடபலாத மற்றும் யட்டிநுவர, கேகாலை மாவட்டத்தில் புலத்கொஹுபிட்டிய, மாவனெல்ல, தெஹியோவிட்ட மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளுக்கும், மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொட மற்றும் இரத்தினபுரி, எஹலியகொட, எலபாத, குருவிட்ட, கொடவெல குருவிட்ட ஆகிய இடங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பதுளை மாவட்டத்தின் வெலிமடை மற்றும் ஹல்துமுல்ல, காலி மாவட்டத்தின் எல்பிட்டிய மற்றும் குருநாகல் மாவட்டத்தில் பொல்கஹவெல ஆகிய பகுதிகளுக்கு நிலை 01 மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்