இலங்கை: கெஹெலியவிற்கு மீண்டும் நீடிக்கப்பட்ட விளக்கமறியல்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூன் மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பான வழக்கில் சந்தேகநபர்கள் இன்று (14) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)





