இலங்கை

இலங்கை – நாளைய தினம் நடைபெறவுள்ள வேலை வாய்ப்பு தொடர்பான தொகைமதிப்பு நடவடிக்கை

தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபர திணைக்களத்தால் 11வது “அரசு மற்றும் அரசு சார்ந்த துறை வேலை வாய்ப்பு தொடர்பான தொகைமதிப்பு 2022/23” நாடுதழுவிய ரீதியில் ஒரே நாளில்2024ம் ஆண்டுக்கான தொகை மதிப்பு நாளை (28) நடைபெறவுள்ளதாக, தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபர திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

மத்திய அரசாங்க நிறுவனங்களின் கீழ் இயங்கும் திணைக்களங்கள்,நியதிச்சட்டரீதியான சபைகள், அரச கூட்டுத்தாபனங்கள், அரச கம்பனிகள் உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் மாகாண அரச துறையின் கீழ் இயங்கும் திணைக்களங்கள், அரச நிறுவனங்கள் ஆகியவற்றில் கடமையாற்றும் சகல உத்தியோகத்தர்களும் தொகை மதிப்புக்கு உள்ளடக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக் கணக்கெடுப்பில் நிரந்தர, அமைய, சமயா சமய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் பெற்று சம்பளம் பெறும் சகல உத்தியோகத்தர்களும் தொகை மதிப்புக்குற்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொகை மதிப்பு முடிவடைந்ததும் அனைத்து ஆவணங்களையும் உரிய திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content