“கணக்காய்வாளர் நாயகம் இல்லாத நாடாக இலங்கை”
கணக்காய்வாளர் நாயகம் Auditor General இல்லாத நாடாக இலங்கை இன்று மாறியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர Dayasiri Jayasekara தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
இந்நாட்டில் ஊழல், மோசடிகளுக்கு எதிராக அதிகளவில் குரல் கொடுத்த கட்சிதான் ஜே.வி.பி. (JVP. அக்கட்சியின் ஆட்சியின்கீழ் கணக்காய்வாளர் நியமனம் இழுபறியில் இருப்பது வேதனையளிக்கின்றது.
கணக்காய்வாளர் நாயகம் இன்றி நாடாளுமன்றத்தில் கோப் (COPE) மற்றும் கோபா (COPA) குழு கூட்டங்களை நடத்த முடியாது. எனவே, எதிர்வரும் 6 ஆம் திகதிக்குள் கணக்காய்வாளர் நாயகம் நியமிக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்படும் பெயரை அரசமைப்பு பேரவை ஏற்க வேண்டும் என்ற மனோநிலையில் இருந்தே ஆளுங்கட்சியினர் செயல்படுகின்றனர். இதனை ஏற்க முடியாது.
ஜே.ஆர்.ஜயவர்தன காலத்தில் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் என்.பி.பி. ஆட்சியிலும் இடம்பெறுகின்றன. இது தவறு. நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும்.” – என்றார் தயாசிறி ஜயசேகர.
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டவரின் பெயரை அரசமைப்பு பேரவை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல கணக்காய்வாளர் நாயகம் விவகாரமானது தற்போது இலங்கை அரசியல் களத்தில் பிரதான விவாதமாக மாறியுள்ளது.





