இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை – ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்காலம் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்!

ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால அரசியல் போக்கு குறித்து இன்று (16) காலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான திரு.ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இதில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் யானைச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்திரத்தன்மை மற்றும் கட்சியின் திசையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 53 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்