இலங்கை

இலங்கை: 3 மணிநேர வாக்குமூலத்திற்குப் பிறகு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறிய கோட்டாபய!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (17) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) ஆஜராகி விளக்கமளித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்றைய தினம் 3 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

கதிர்காமம் பகுதியிலுள்ள காணி ஒன்றுக்கு மின்சாரத்தைப் பெற்றுக் கொண்டமை தொடர்பிலான குற்றச்சாட்டு குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் ஏலவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரின் தலைமை பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சி ஆகியோரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!