இலங்கை

இலங்கை – மருந்து கொள்வனவு தொடர்பில் வாக்குமூலம் வழங்காத முன்னாள் அமைச்சர்கள்!

இலங்கையில் தரமற்ற மருந்துகளை கொண்டு வந்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் அமைச்சரவையில்  இடம்பெற்றிருந்த 18 அமைச்சர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் அமைச்சர் திரன் அலஸ், முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் மற்றும் முன்னாள் அமைச்சர் மஹிந்த அமர்வீர ஆகியோர் வாக்குமூலங்களை வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகறிது.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 12 சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்ததுடன், முதலாவது சந்தேக நபரான நிறுவனத்தின் உரிமையாளர் சுதத் ஜானக பெரேரா சிறைச்சாலையினரால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

முதலாம் சந்தேக நபருக்கு பிணை வழங்குமாறு கோரிய நீதவான், பிணை வழங்க மறுத்ததோடு, முதலாம் சந்தேக நபரை எதிர்வரும் டிசம்பர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

ஏனைய 11 சந்தேக நபர்களையும் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்