இலங்கை

இலங்கை – புகையிரத சுரங்கப்பாதையில் மோதுண்ட வெளிநாட்டவர் மரணம்

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெனிகே ரயிலில் பயணித்த வெளிநாட்டவர் சுரங்கத்தில் மோதியதில் உயிரிழந்துள்ளதாக நானுஓயா புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு பயணத்த ரயிலில் எல்ல புகையிரத நிலையத்திற்கு பயணித்த வெளிநாட்டவர் புகையிரத சுரங்கப்பாதையில் இன்று (03) மோதுண்டு மாலை 4 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

நானுஓயா மற்றும் இதல்கஸ்ஹின்ன புகையிரத நிலையங்களுக்கு இடையிலான 19வது புகையிரத சுரங்கப்பாதைக்கு அருகில் குறித்த வெளிநாட்டவர் சடலமாக மீட்கப்பட்டார், உயிரிழந்த வெளிநாட்டவரின் சடலம் புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் ஹப்புத்தளை புகையிரத நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அதிகாரி தெரிவித்தார்.

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!