இலங்கை

இலங்கை – கொலை சம்பவமொன்றுடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த தந்தையும் மகனும் கைது

கொலை சம்பவமொன்றுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேகநபர்கள் நேற்று (24) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இம்மாதம் 22ஆம் திகதி, மாதம்பே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமடபிட்டிய பகுதியில், இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியதில், 42 வயதுடைய நபரை தாக்கி கொலை செய்த சந்தேகத்தின் பேரில் மேற்படி இருவர் கைது செய்யப்பட்டனர்.

கொலை செய்யப்பட்ட நபர் மணக்குளம், காக்கப்பள்ளியில் வசித்து வந்தவர் என்பதுடன், அவரது கொலை தொடர்பில் மாதம்பே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அந்த விசாரணையின் போது, ​​குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் நேற்று (24) மாலை மாதம்பே, தெமட்டபிட்டிய பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கரவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 28 மற்றும் 53 வயதுடைய தந்தை மற்றும் மகன் என பொலிஸார் தெரிவித்தனர்.

மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்