இலங்கை: தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தவறான பாதையில் பயணித்த சாரதி கைது
தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன சேவைப் பகுதிக்கு அருகில் கொழும்பு நோக்கிச் செல்லும் பாதையில் தவறான திசையில் வாகனத்தை செலுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனநல சிகிச்சைக்காக காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குறித்த நபர், தனது சாரதி ஓய்வறையை பயன்படுத்துவதற்காக நிறுத்திய போது வாகனத்தை கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் கொழும்பு நோக்கி செல்லும் பாதையில் எதிர் திசையில் வாகனத்தை செலுத்தியதால் மற்ற வாகன ஓட்டிகளுக்கு கணிசமான ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த மற்றுமொரு வாகனத்தின் டேஷ் கேமராவில் பதிவாகியுள்ளது.
(Visited 20 times, 1 visits today)





