இலங்கை

இலங்கை – முன்னாள் ஜனாதிபதி உயிர் அச்சுறுத்தல்: சந்தேகநபர் கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்வதாக எச்சரிக்கை விடுத்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கிரிவெல பகுதியை சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் கொழும்பில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக சென்று, மஹிந்தவை கொலை செய்வதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

(Visited 7 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!