இலங்கை: சுஜீவவுக்கு 250 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் சி.பி.ரத்நாயக்கவுக்கு உத்தரவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவிற்கு 250 மில்லியன் ரூபாயை நட்டயீடாக செலுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி ரத்னாயக்கவிற்கு கல்கிசை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சருக்கு நட்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
(Visited 19 times, 1 visits today)