இலங்கை

இலங்கை : வவுனியாவில் இரண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்கள் இடையே மோதல்

வவுனியா, பட்டாஞ்சிவூர் பகுதியில் நேற்றிரவு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீனின் ஆதரவாளர்களுக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் ஆதரவாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காதர் மஸ்தான் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகிய இருவரும் குறித்த பகுதியில் தமது இறுதி அரசியல் பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

காதர் மஸ்தானின் ஆதரவாளர்கள் ரிஷாத் பதியுதீனின் வாகனம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இரண்டு முன்னாள் எம்.பி.க்களின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதையடுத்து, வவுனியா மற்றும் நெளுக்குளம் பொலிசார் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.

இந்த மோதலில் இரு தரப்பினருக்கும் சொந்தமான பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை வவுனியா மற்றும் நெளுக்குளம் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்