இலங்கை

இலங்கை : வவுனியாவில் பேருந்தின் சில்லில் சிக்கிய குழந்தை பலி!

ஏழு வயது குழந்தையொன்று பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளது.

வவுனியா, பாவக்குளம் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துவிச்சக்கரவண்டியில் நண்பர்கள் குழுவுடன் பயணித்த குழந்தையின் துவிச்சக்கர வண்டி பஸ்ஸுடன் மோதியதாகவும், அதன்பின் பின் சக்கரத்தில் குழந்தை சிக்குண்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்த குழந்தை வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்துல் மஜீத் உமர் என்ற 07 வயது குழந்தையே விபத்தில் உயிரிழந்துள்ளது. உயிரிழந்த குழந்தையின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலை பிரேத அறையில் நடைபெறவுள்ளது.

விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!