இலங்கை : 06 ஆண்டுகளுக்கு பின் விமான நிலைய புறப்பாடு முனையத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள பேருந்துகள்!

187 ஆம் இலக்க வழித்தடத்தின் கீழ் இயங்கும் கோட்டை – கட்டுநாயக்க சொகுசு பேருந்துகள் இன்று (10) முதல் விமான நிலைய புறப்பாடு முனையத்திற்கு வருவதற்கு விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.
விமானப் பயணிகளின் வசதிக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிறுவனம் கூறுகிறது.
இதனால், கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு கோட்டை-கட்டுநாயக்க பேருந்துகள் விமான நிலைய புறப்பாடு முனையத்திற்கு வர அனுமதிக்கப்படுகின்றன.
இருப்பினும், விமான நிலையத்தில் தங்கியிருந்து இந்தப் பேருந்து சேவையை இயக்க இந்தப் பேருந்துகளுக்கு வாய்ப்பு இல்லை.
2019 ஈஸ்டர் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினரின் வேண்டுகோளைத் தொடர்ந்து இந்தப் பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
(Visited 47 times, 1 visits today)