இலங்கை: பேருந்து கட்டண திருத்தம் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைப்பு

ஜூலை மாதம் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த வருடாந்திர பேருந்து கட்டண திருத்தத்தை ஆகஸ்ட் வரை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜூலை மாதத்தில் பேருந்து கட்டண திருத்தம் செய்வது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்று LPBOA தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
(Visited 2 times, 1 visits today)