இலங்கை

இலங்கை: காதல் விவகாரத்தில் அடித்து கொலை செய்யப்பட்ட இளைஞன்! நீதி கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

மாத்தளை பிரதேசத்தில் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட 17 வயது இளைஞனுக்கு நீதி கோரி இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவர் ஒரு நண்பருடன் மற்றொரு நண்பனின் காதலியை சந்திப்பதற்காக சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், மூன்று இளைஞர்களும் யுவதியின் தந்தை உட்பட ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதால், 17 வயது இளைஞன் உயிரிழந்தான்.

இந்த கொலை தொடர்பாக யுவதியின் தந்தை உட்பட 3 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு நீதி கோரி வடக்கு மாத்தளையில் இன்று போராட்டம் நடத்தப்பட்டதால் கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் போக்குவரத்து தடைப்பட்டது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!