இலங்கை

இலங்கை – கேகாலையில் மண்மேடு சரிந்து மூன்றரை வயதுக் குழந்தை உயிரிழப்பு

கேகாலை, மங்களகம, குருந்திய வராஹேன கிராமத்தில் வீடொன்றுக்கு அருகாமையில் மூன்றரை வயதுக் குழந்தையின் மீது மண்மேடு விழுந்ததில் அக்குழந்தை உயிரிழந்துள்ளது. கவிந்து ஷெஹந்தா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

வீட்டின் பின்புறத்தில் பக்கச்சுவர் அமைப்பதற்காக காலை முதல் கரை வெட்டப்பட்டிருந்ததாகவும், அங்கு விளையாடிக் கொண்டிருந்த போது குழந்தையின் மீது மண்மேடு விழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அயலவர்களின் உதவியுடன் குழந்தையை மீட்டு கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் குழந்தை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்