இலங்கை

இலங்கை : நாவலப்பிட்டியில் தாய் ஒருவர் அடித்துக் கொலை!

67 வயதுடைய தாயை இருபத்தி இரண்டு விலா எலும்புகள் முறியும் வரை அடித்துக் கொன்ற 41 வயது மகனை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாவலப்பிட்டி பொஹில் மேல் பகுதியில் வசித்து வந்த எஸ். ஜொலிமா என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இளைய மகன் குறித்த தாயின் தலைப்பகுதியில் தாக்கியதாகவும், இதனால் தாயின் விலா எலும்புகள் உடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாகவே மரணம் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்  இதற்கு முன்னர் தனது தந்தையை தாக்கி தலையில் காயம் ஏற்படுத்தியிருந்ததாகவும், எனவே தந்தை தற்போது தனது மூத்த மகளின் வீட்டிற்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content