இலங்கை செய்தி

இலங்கை: லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டில் நடந்த 80 சோதனைகளில் 67 பேர் கைது

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) கடந்த 9 மாதங்களில் 81 சோதனைகளை நடத்தி 67 நபர்களை லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆணைக்குழுவிற்கு 3,045 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அவற்றில் லஞ்சம் தொடர்பான 259 புகார்களும், ஊழல் தொடர்பாக 466 புகார்களும், சட்டவிரோதமாக சொத்து சேர்த்தது தொடர்பான 86 புகார்களும் பதிவாகியுள்ளன.

810 முறைப்பாடுகள் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினாலோ அல்லது இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் வராத காரணத்தினாலோ நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பெறப்பட்ட புகார்களில், 124 கோப்புகள் வழக்குத் தொடரவும், 30 கோப்புகள் பதிவுக்காகவும் அனுப்பப்பட்டுள்ளன.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!