இலங்கை: 11 வயது குழந்தையை துஷ்பிரயோகம் செய்த 50 வயது நபருக்கு 8 வருட சிறைத்தண்டனை
 
																																		2015ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற வெசாக் பண்டிகையின் போது 11 வயது குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 50 வயதான ஒரு பிள்ளையின் தந்தைக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தண்டனை விதித்ததுடன், சந்தேகநபருக்கு 10,000 அபராதமும் விதித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 200,000 நட்டஈடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் அபராதம் மற்றும் நட்டஈடு செலுத்தத் தவறினால் மேலும் 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு மே மாதம் தனது பெற்றோருடன் கொழும்பில் உள்ள வெசாக் வலயத்திற்குச் சென்றிருந்த போது பாதிக்கப்பட்ட பெண் சந்தேக நபரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானார்.
வெசாக் விளக்கு தயாரிப்பதாக கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணை ஒரு கடைக்குள் இழுத்துச் சென்று, அங்கு அவர் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
        



 
                         
                            
