இலங்கை செய்தி

இலங்கை: எழுத்தாளர் கைது விசாரணைக்கு இடையே 3 அதிகாரிகள் இடமாற்றம்

எழுத்தாளர் கசுன் மகேந்திர ஹினட்டிகலவை அதுருகிரிய பொலிசார் கைது செய்தமை தொடர்பில், உப பொலிஸ் பரிசோதகர் உட்பட மூவர் மிரிஹான தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களுமே தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

மறைந்த ஜெக்சன் அன்டனியின் மருமகனான கசுன் மகேந்திர ஹினட்டிகல, பொலிஸ் தலைமையகத்தில் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில் கொழும்பு தெற்கிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் பேரில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தம்மை பொலிஸ் அதிகாரிகள் வீதியில் வைத்து பலவந்தமாக கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று துன்புறுத்தியதாக கசுன் மகேந்திர ஹினட்டிகல தெரிவித்துள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை