இலங்கை: 24 மணி நேர கடவுச்சீட்டு சேவை! பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்பு
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான 24 மணி நேர சேவையானது ஒரு நாள் சேவைக்கு மட்டுப்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பதாரர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை இந்த சேவையில் பதிவு செய்யலாம், அதே நாளில் பாஸ்போர்ட் வழங்குவதை உறுதிசெய்து கொள்ளலாம்.






