இலங்கை செய்தி

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் – நாடாளுமன்றில் சிரட்டை வழங்கிய சிறிதரன் எம்.பி

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூரும் வகையில் நாடாளுமன்றில் ‘சிரட்டை’ ஒன்றை வழங்கி நாடாளுமன்ற நூலகத்தில் வைக்குமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (13) இடம்பெற்ற நிதி ஒழுங்குகள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“இந்த மாதம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. நமது வலிகளை வெளிப்படுத்துகிறது. இந்த ‘சிரட்டை’ சபா பீடத்தில் சமர்ப்பிக்கிறேன். இது முள்ளிவாய்க்காலில் எமது மக்களுக்கு கஞ்சி வழங்குவதற்காக பயன்படுத்தப்பட்டது.

அப்போது குடிக்கும் சாதனம் இல்லை. கஞ்சி செய்ய அரிசி இல்லை. உப்பு இல்லை. தண்ணீர் எடுக்க முடியாத நிலை  ஏற்பட்டது.

இவ்வாறான நிலையில் இந்த  சிரட்டையில் உப்பில்லாத கஞ்சியை மட்டும் குடித்துவிட்டு எமது மக்களும் குழந்தைகளும் தப்பினர்.

எனவே, நிறைவுக்கு அடையாளமாக இந்தச் சிரட்டையை சபா பீடத்தில் சமர்ப்பிக்கிறேன். தயவு செய்து இந்த சிரட்டையை நாடாளுமன்ற நூலகத்தில் வைக்குமாறு. – கூறினார்.

(Visited 32 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை