ஆசியா

வான் எல்லைக்குள் அத்துமீறிய உளவு விமானம் ; சீனா மீது ஜப்பான் புகார்

சீனாவின் உளவு விமானம் ஜப்பானின் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக டோக்கியோ குற்றஞ்சாட்டியுள்ளது.

Y-9 என்று அழைக்கப்படும் சீனாவின் விமானம் சுமார் 2 நிமிடங்கள் ஜப்பான் எல்லைக்குள் இருந்ததாக டோக்கியோ கூறியது.

திங்கட்கிழமை இரவு 11.29 மணிக்கு டாஞ்சோ தீவுகளில் சீனாவின் விமானம் நுழைந்ததாகவும் அதன் பின்னர் ஜப்பான் தனது போர் விமானங்களை அங்கு அனுப்பியதாகத் தெரிவித்தது.

இரண்டு தரப்பிலும் எந்த ஆயுதங்களும் பாய்ச்சப்படவில்லை என்று ஜப்பானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று ஜப்பான் கூறியுள்ளது. மேலும் அது டோக்கியோவில் உள்ள சீன தூதரகத்துக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.

இச்சம்பவம் அவ்வட்டாரத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஏற்கெனவே சீனா அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் எதிராக தனது பலத்தைக் காட்ட போட்டியிட்டு வரும் நிலையில் இது அவ்வட்டாரத்தில் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!