இலங்கை

இலங்கை: ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசந்துறைக்கு இடையே விசேட ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, தேர்தல் பணிகளில் பங்கேற்கும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இந்த ரயில்களில் பயணிக்க முடியும்.

இன்றும்(19) நாளை மறுதினமும்(21) காலை 9 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை விசேட ரயிலொன்று போக்குவரத்தில் ஈடுபடவுள்ளது.

நாளை(20) மற்றும் எதிர்வரும் 22ஆம் திகதிகளில் காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை வரை 2 விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேர்தல் நடைபெறும் 21ஆம் திகதி வழமையான நேர அட்டவணையின் பிரகாரம் ரயில்கள் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, தூர சேவை ரயில்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், குறுகிய தூரங்களுக்கான ரயில் சேவைகள் குறைக்கப்படலாம் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!