இலங்கை

குருந்தூர் மலையில் பதற்றத்திற்கு மத்தியில் ஆதிசிவன் ஐயனாருக்கு விசேட பொங்கல் – பௌத்தர்கள் அட்டகாசம்

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் வழிபாடுகள் இன்று (18) நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அதேவேளை சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குருந்தி விகாரையில் பௌத்த மக்களும் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்

இந்த வழிபாட்டுக்கு குமுழமுனை, தண்ணிமுறிப்பு வீதியால் சென்ற மக்கள் பொலிசாரின் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள் பொங்கல் நிகழ்வுகளை முன்னிட்டு பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது

இந்த நிலையில் தொல்பொருள் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் தொல்பொருள் திணைக்களத்தின் விதிகளுக்கு அமைவாக ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் நிலத்தில் கல்லு வைத்து அதன்மேல் தகரம் வைத்து அதற்கு மேல் கல் வைத்து பொங்கல் பொங்கினார்கள்.

ஒரு இடத்திலேயே நெருப்பு மூட்ட அனுமதி வழங்கப்பட்ட அதேவேளை ஏனைய பக்தர்கள் பொங்கல் பொங்க அனுமதிக்கப்படவில்லை ஒரு இடத்தில் நெருப்பு மூட்டி இரண்டு தடவைகள் பானையில் பொங்கல் பொங்கி படைத்து வழிபாடுகளை மேற்கொண்ட நிலையில் பௌத்த துறவிகளால் குழப்ப நிலை ஒன்றும் ஏற்பட்டது இதனை பொலிசார் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள்

மறுபக்கத்தில் பௌத்த விகாரையில் பௌத்த மக்களாலும் பௌத்த துறவிகளாளும் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன இரண்டு பகுதிக்கும் இடையில் பொலிசாரின் பாதுகாப்பு பலமாக போடபட்டிருந்தது

இந்த நிலையில் ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் பொங்கல் பொங்கி படைத்து பூசை வழிபாடுகளை மேற்கொண்டு பிரசாதங்களை பரிமாறினார்கள் இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் , கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன், துரைராசா ரவிகரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என சுமார் 500 பேர்வரையில் கலந்து கொண்டனர்

இதேவேளை பௌத்த விகாரையில் இடம்பெற்ற வழிபாடுகளில் குறித்த விகாரை மற்றும் வவுனியா சப்புமல்கஸ்கட ரஜமாக விகாரை விகாராதிபதி கல்கமுவ சாந்தபோதி தேரர் தலையையிலான 29 தேரர்கள் மற்றும் சுமார் 300 பேர் வரையிலான மக்கள் கலந்து கொண்டனர்.

 

(Visited 21 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்