இலங்கை

இலங்கை : தட்டம்மை தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு விசேட அறிவிப்பு!

தட்டம்மை தடுப்பூசியை இதற்கு முன்னர் பெற்றுக் கொள்ளாத மற்றும் ஒரு டோஸ் மாத்திரம் பெற்றுக்கொண்டவர்கள்  நவம்பர் 4 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை நடைபெறும் வேலைத்திட்டத்தின் ஊடாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் நிறுவகத்தின் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் ஹசித திசேரா சுட்டிக்காட்டினார்.

இலங்கை அம்மை நோயை இல்லாதொழித்த நாடு, ஆனால் 2023 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சில பகுதிகளில் அம்மை நோயாளர்கள் பதிவாகுவதை காணக்சுகூடியதாக உள்ளதகா சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.

9 மாத வயதில் குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி போடப்படுகிறது, அதற்கு முன் தட்டம்மை பிடிப்பதற்கான அதிக ஆபத்து உள்ளது.

மேலும், இதற்கு முன்னர் தட்டம்மை தடுப்பூசியைப் பெறாதவர்கள் மற்றும் ஒரு டோஸ் மட்டுமே பெற்றவர்களும் ஆபத்தில் இருப்பதாக சுகாதாரத் துறைகள் சுட்டிக்காட்டுகின்றன.

(Visited 26 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!