இலங்கை

இலங்கை அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை

இலங்கை இந்த ஆண்டு செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பல்வேறு பேரிடர்களால் வேலைக்குச் செல்ல முடியாத அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இவ்வாறு, பல்வேறு மாகாணங்களில் வெள்ளம், மண்சரிவு, வீதித் தடைகள் போன்றவற்றினால் ஏற்படும் போக்குவரத்து சிரமங்கள், இடப்பெயர்வுகள் மற்றும் அனர்த்தங்கள் காரணமாக கடமை நிலையங்களுக்கு சமூகமளிக்க முடியாத அரச உத்தியோகத்தர்கள் இந்தச் சலுகையைப் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையைப் பெற்றுக்கொள்வதற்கு, தங்கள் வசிப்பிடத்தல் உள்ள கிராம அதிகாரியின் சிபாரிசுடன் கோரிக்கை விடுக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு.கே.டி.என்.ரஞ்சித் அசோக நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்