இலங்கையில் பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி தொடர்பில் விசேட அறிவிப்பு

இலங்கையில் ஜனவரி 02 ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் இவ்வாறு ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்துப் பாடசாலைகளினதும் மூன்றாம் பாடசாலை தவணை ஜனவரி மாதம் 24 ஆம் திகதிவெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் என்று அமைச்சு கூறுகிறது.
அது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல் வெளியாகியுள்ளது.
(Visited 13 times, 1 visits today)