இலங்கை

உண்மையை பேசுங்கள் – இலங்கை அரசியல் வாதிகளிடம் உலக வங்கியின் பணிப்பாளர் கோரிக்கை!

தயவ செய்து உண்மையை பேசுங்கள் எனவும் இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல எனவும், இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் பரிஸ் ஹடாட் சர்வோஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (18.07) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இலங்கை தற்போது முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் பாராட்டுக்குரியது எனக் கூறினார்.

இலங்கை தற்போது எதிர்பாராத நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனால் இந்த முடிவுகள் சரியான நேரத்தில் எடுக்கப்பட வேண்டும்.

தற்போதைய வேலைத்திட்டத்தை அப்படியே தொடர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுதான் இதில் முக்கியமானது. தயவு செய்து உண்மையை பேசுங்கள. இது அரசியல் செய்ய வேண்டிய நேரம் அல்லஇ சரியானதை செய்ய வேண்டிய நேரம். இலங்கை மீண்டும் தலை தூக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது’ எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content