ஐரோப்பா

கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஸ்பெயின் ஜனாதிபதி

ஸ்பெயின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொவிட் வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என அவர் தீர்மானித்துள்ளார்.

அதன்படி, இம்முறை ஜி20 மாநாட்டில் ஸ்பெயின் சார்பில் துணை ஜனாதிபதி நாடியா கால்வினோ சான்டாமரியா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

ஸ்பெயினின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ் இந்த ஆண்டு G20 உச்சிமாநாட்டில் இருந்து விலகும் மூன்றாவது அரச தலைவர் ஆவார், அதே நேரத்தில் ரஷ்யாவின் விளாடிமிர் புடின் மற்றும் சீனாவின் ஜி ஜின்பிங் ஆகியோர் உச்சிமாநாட்டில் சேர மாட்டார்கள் என்று முன்னர் கூறியிருந்தனர்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!