ஆசியா

ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண நிதி ஸ்பெயின் வெளியிட்ட அறிவிப்பு

ஐ.நா. பாலஸ்தீனிய அகதிகள் நிறுவனமான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்திற்கு ஸ்பெயின் கூடுதலாக 3.5 மில்லியன் யூரோக்கள் உதவி அனுப்புவதாக அறிவித்துள்ளது.

அக்டோபர் 7 ஆம் திகதி தெற்கு இஸ்ரேலுக்குள் நடந்த ஹமாஸ் தாக்குதலில் 12 ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவன ஊழியர்கள் பங்கேற்றதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது.

இந்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் தங்கள் நிதி உதவியை அதிரடியாக நிறுத்திய பின்னர் குறிப்பிடத்தக்க நிதி பற்றாக்குறை குறித்து நிறுவனம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனால் பலஸ்தீன அகதிகளுக்கு போதிய உணவு கிடைக்காத சூழல் உருவாகலாம் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.

மேற்கு நாடுகளின் இந்த முடிவுக்கு பலஸ்தீனம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஐநா பொதுச் செயலாளரும், மேற்கு நாடுகளின் இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

TJenitha

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!