நேட்டோ பாதுகாப்பிற்கான செலவீன அதிகரிப்பை நிராகரிக்கும் ஸ்பெயின்!

அதிகரித்து வரும் உலகளாவிய பதற்றங்களுக்கு மத்தியில், நேட்டோ பாதுகாப்பு செலவினங்களுக்கான தொகையை 05 வீதத்தால் உயர்த்தியுள்ளது.
இந்நிலையில் நேட்டோவின் இந்த திட்டத்தை ஸ்பெயின் நிராகரித்துள்ளது, இது “நியாயமற்றது” என்று கூறியுள்ளது.
நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ருட்டேவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட செலவு இலக்கை அடைய உறுதியளிக்க முடியாது” என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கூறியுள்ளார்.
நேட்டோவில் உள்ள பெரும்பாலான அமெரிக்க நட்பு நாடுகள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% தங்கள் பாதுகாப்பு மற்றும் இராணுவத் தேவைகளுக்கு முதலீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்கும் பாதையில் உள்ளன.
ஜூன் தொடக்கத்தில், ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து புதிய இலக்கை அடைய இலக்கு வைத்துள்ளதாக தெரிவித்தன.
32 நாடுகளைக் கொண்ட இராணுவக் கூட்டணியில் ஸ்பெயின் கடந்த ஆண்டு மிகக் குறைந்த செலவினமாக இருந்தது,