தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் சிறையில் இருந்து விடுதலை?
பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் இயோலை சிறையில் இருந்து விடுவிக்க தென் கொரிய நீதிமன்றம் உத்தரவிட்டது.
சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் இன்று (07.03) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மற்ற தென் கொரிய ஊடகங்களும் இதே போன்ற செய்திகளை வெளியிட்டன.
எவ்வாறாயினும் நீதிமன்றம் உடனடியாக இந்த அறிக்கைகளை உறுதிப்படுத்தவில்லை.
டிசம்பர் 3 ஆம் திகதி இராணுவச் சட்ட ஆணை தொடர்பாக யூன் ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்த உத்தரவு கிளர்ச்சிக்கு சமம் என்று புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்தக் குற்றத்தில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
டிசம்பரில் சட்டமன்ற உறுப்பினர்களால் யூன் தனித்தனியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார், யூனின் ஜனாதிபதி பதவியை முறையாக முடிவுக்குக் கொண்டுவருவதா அல்லது அவரை மீண்டும் பதவியில் அமர்த்துவதா என்பதை முடிவு செய்யும் பொறுப்பு அரசியலமைப்பு நீதிமன்றத்திடம் விடப்பட்டது.
அரசியலமைப்பு நீதிமன்றம் யூனின் பதவி நீக்கத்தை உறுதி செய்தால், அவர் அதிகாரப்பூர்வமாக பதவியில் இருந்து நீக்கப்படுவார், மேலும் இரண்டு மாதங்களுக்குள் அவரது வாரிசைத் தேர்ந்தெடுக்க ஒரு தேசிய தேர்தல் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.





