உலகம் செய்தி

உலக சாதனை படைத்த தென் கொரியா ராணுவ அதிகாரி

தென் கொரியா ராணுவ அதிகாரியான ஓ யோஹான், 24 மணி நேரத்தில் 11,707 புல்-அப்ஸ் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை 2024 செப்டம்பர் 28-29 அன்று இன்சியோனில் நடந்தது.

2019ல் தனது ராணுவப் பணியின்போது இதற்கான பயிற்சியைத் தொடங்கிய ஓ யோஹான், கடுமையான உழைப்பு மற்றும் ஒழுக்கத்துடன் இந்த இலக்கை அடைந்துள்ளார்.

முன்னதாக 8,707 புல்-அப்ஸ் எடுத்து சாதனை படைத்திருந்த இவர், ஒரு வாரத்திற்குள் மற்றொரு போட்டியாளரால் அந்த சாதனை முறியடிக்கப்பட்டதால், மீண்டும் இந்த மாபெரும் 11,707 என்ற எண்ணிக்கையை எட்டி உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!