ஆசியா

யூனின் பதவி நீக்கத்தை அடுத்து ஜூன் 3ஆம் திகதி தென் கொரிய அதிபர் தேர்தல்

தென்கொரிய அரசாங்கம், ஜூன் 3ஆம் தேதி அதிபர் தேர்தலை நடத்த ஒப்புதல் அளித்துள்ளது.

சில மணி நேரம் நீடித்த ராணுவச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதால் அதிபர் யூன் சுக் இயோல் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

செவ்வாய்க் கிழமை (ஏப்ரல் 8) தேசிய தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை நடத்திய பிறகு அமைச்சரவை தேர்தல் குறித்து முடிவு செய்தது.

தேர்தலுக்காக ஒரு நாள் விடுமுறை அளிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் அவசியம்.

கடந்த டிசம்பர் 3ஆம் திகதி ராணுவச் சட்டத்தைக் கொண்டு வந்ததால் தனது கடமையிலிருந்து மீறிச் செயல்பட்டதற்காக அரசியலமைப்பு நீதிமன்றத்தால் யூன் அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

ராணுவச் சட்டத்தின்போது நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் துருப்புகள் நிறுத்த முயற்சி செய்ததால் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிபர் பதவி காலியாக இருந்தால் 60 நாள்களுக்குள் தேர்தல் சட்டப்படி தேர்தல் நடத்த வேண்டும்.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!