ஆசியா

தேசிய மூலோபாய தொழில்களுக்கு 46 பில்லியன் நிதி வழங்க தென் கொரியா திட்டம்

உலகளாவிய போட்டித்தன்மை, நாட்டைப் பாதுகாக்கும் முனைப்பு ஆகியவை தீவிரமடைந்து வருகிறது.

இதனால், பாதிக்கப்படும் சில்லு உற்பத்தி போன்ற உத்திபூர்வத் தொழில்நுட்பங்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்க தென்கொரியா முடிவுசெய்துள்ளது.

அதன்படி, 50 டிரில்லியன் வான் (S$46 பில்லியன்) மதிப்பிலான காப்புறுதி நிதியமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அந்நாடு புதன்கிழமை (மார்ச் 5) தெரிவித்தது.

இந்நடவடிக்கையை ஆதரிக்கும் வகையில், உலகம் முழுவதிலுமிருந்து அதிநவீன தொழில்நுட்பங்களில் பணிபுரியும் திறனாளர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய கொள்கைகளையும் தென்கொரிய அரசாங்கம் அறிவித்தது.

மேலும், உலகளாவிய நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவமுள்ள திறமையான வெளிநாட்டினருக்குத் தென்கொரிய நிறுவனங்களில் வேலைசெய்வதற்கு ஏற்ற வகையில் உயர்தர விசாவையும் நிரந்தரக் குடியுரிமையையும் வழங்கவும் அந்நாடு திட்டமிட்டுள்ளதாக ‘ராய்ட்டர்ஸ்’ தெரிவித்தது.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்