இலங்கை செய்தி

யாழ்ப்பாணம் குறித்து தென்னிந்திய திரைப்பட நடிகையும் பேச்சாளருமான கஸ்தூரியின் கருத்து

யாழ்ப்பாணம் என்பது சைவமும் தமிழும் கொட்டி கிடக்கின்ற ஒரு அருள் பூமி, இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு( 29)நேற்றைய தினம் வருகை தந்திருந்த தென்னிந்திய திரைப்பட நடிகையும் பேச்சாளருமான கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

தாவாடி அம்பலவான முருகன் ஆலயத்தின் திருமஞ்ச திருவிழாவுக்கு வருகை தந்து சிறு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் என்பது அருள் பூமி. இலங்கை முழுவதுமே முருகனின் கடாட்சம் தான் அமைந்துள்ளது.

இப்போதுதான் ஆங்காங்கே விகாரம் கட்டுகிறார்கள். சைவ சமயமும் இங்கேதான் இருக்கிறது தெற்கில் கதிர்காமம் முதல் வடக்கே நல்லூர் யாழ்ப்பாணம் வரை எல்லாமே அவன் அருள் மட்டுமே இருக்கிறது.

https://web.facebook.com/reel/272418598732907

இதை யாரும் மறுக்க முடியாது. தமிழ் கடவுள் முருகன் இருக்கும் வரை தமிழ் உறவுகள் இருக்கும் வரை யாரும் நம்மளை அசைக்க முடியாது.

இந்த கோயிலுக்கு உள்ளே வரும் பொழுது அருமையான மந்திரங்கள் எல்லாம் ஓங்கி ஒலித்தன அதேபோன்று தமிழ் நாதஸ்வர கலைஞர்களின் அற்புத இசையில் எம்பெருமான் வளம் பெறும் காட்சி அற்புதமானது. தமிழ்நாட்டில் எல்லாம் இவ்வாறு கிடையாது. எல்லாவற்றையும் அரசு எடுத்துக் கொண்டது அதற்குப் பிறகு உண்டியலில் பணம் நிரப்புவதை மட்டுமே அவர்கள் குறியாக கொண்டிருந்தார்கள் இப்படியான அருமையான காட்சிகள் எல்லாம் அங்கே குறைந்துவிட்டது. என்ன தெரிவித்துள்ளார்.

(Visited 9 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை