இங்கிலாந்தில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ள தென்கிழக்கு நீர் நிறுவனம்
இங்கிலாந்தின் தென்கிழக்கு நீர் நிறுவனம் (SEW) இந்த வாரம் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சில பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டதால், பாராளுமன்ற உறுப்பினர்கள் (MPs) மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகள் (Ofwat) நிறுவனத்துக்கு அழுத்தத்தை அதிகரித்துள்ளனர்.
ஆறு வாரங்களில் இரண்டாவது முறையாக சில பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டதால், தென்கிழக்கு நீர் நிறுவனத்தின் தலைவரான டேவிட் ஹின்டன் (David Hinton) நாடாளுமன்றத்திற்கு திரும்ப அழைக்கப்பட்டு, எம்.பி.க்களிடமிருந்து கேள்விகளை எதிர்கொண்டார்.
இந்த முறையிலும், தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் ட்ரெய்ன் (Chris Train) சாட்சியமாக அழைக்கப்பட்டுள்ளார்.
ஹின்டன் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளன.
இதேவேளை, பிரதமர் மற்றும் சுற்றுச்சூழல் செயலாளர் வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைப் பற்றியும் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஒழுங்குமுறை ஆணையமான ஆஃப்வாட் (Ofwat) வாடிக்கையாளர் பராமரிப்பில் SEW தனது உரிமையை மீறியதா என விசாரணையை தொடங்கியுள்ளது.





