இந்தியா செய்தி

பாடல் காப்புரிமை விவகாரம் – ஏ.ஆர். ரஹ்மான் அபராதம் செலுத்த இடைக்கால தடை

பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற ‘வீரா ராஜ வீரா’பாடல் காப்புரிமை வழக்கில் ஏ.ஆர். ரஹ்மான் 2 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என விதிக்கப்பட்ட உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

முன்னதாக, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பயன்படுத்திய ‘வீரா ராஜ வீரா’ பாடலின் இசை தாகருக்கு சொந்தமானது என படக்குழு தரப்பு ஒப்புக்கொண்டதால் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ரூ.2 கோடியை நீதிமன்ற பதிவாளரிடமும், ரூ .2 லட்சத்தை தாகர் பெயரிலும் டெபாசிட் செய்யவும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து, இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மேல்முறையீட்டு மனுவை ஏற்று ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால உத்தரவிற்கு தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஹரிசங்கர் தலைமையிலான டிவிஷன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!