ஐரோப்பா

பணத்திற்காக தாயின் சடலத்துடன் 6 ஆண்டுகள் வாழ்ந்த மகன் – இத்தாலியில் அதிர்ச்சி

இத்தாலியில் காப்புறுதி பணத்திற்காக இறந்த தாயின் சடலத்துடன் 60 வயது முதியவர் ஆறு ஆண்டுகள் வசித்துவந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வனெட்டோ பகுதியைச் சேர்ந்த ஹெல்கா மரியா ஹெகன்பார்த், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தனது 86 வயதில் மரணமடைந்து உள்ளார்.

ஹெல்காவுக்கு மாதந்தோறும் கிடைத்து வந்த பென்ஷன் பணத்தை இழந்து விடக் கூடாது என்று எண்ணி, பலேதிட்டம் போட்ட மகன் அவரது உடலை வீட்டிலேயே மறைத்துவைத்துள்ளார்.

இவ்வாறு 6ஆண்டுகள் ஆன நிலையில், சந்தேகத்தின்பேரில் ஹெல்காவின் குடியிருப்பிற்குள் அதிரடியாக நுழைந்து அதிகாரிகள் சோதனை நடத்திய போது தான் உண்மை அம்பலமாகி உள்ளது.

ஆறு ஆண்டு காலத்தில் ஒன்றரை கோடி ரூபாய் காப்புறுதி தொகையை, அவரது மகன் எடுத்து பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!