செய்தி

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தாகும் சில காய்கறிகள்…!

இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய அவசர உலகில், ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக நீரிழிவு நோய் மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க தங்கள் உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் இல்லை என்றால், உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படலாம். குறிப்பாக, கண்கள், சிறுநீரகம், இதயம் ஆகியவை பாதிக்கலாம். எனவே, நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுப் பழக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தெந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கேள்வி சர்க்கரை நோயாளிகளின் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. சில காய்கறிகளை உட்கொள்வது இரத்த சர்க்கரையை அதிகரிக்கும் அதே வேளையில், சில காய்கறிகள் சிறப்பாக கட்டுப்படுத்தும். இந்நிலையில், நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் எந்தெந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் (Health Tips) என்பதை அறிந்து கொள்ளலாம்.

வெண்டைக்காய்

நீரிழிவு நோயாளிகளுக்கு வெண்டைக்காய் என்னும் லேடிஃபிங்கர் காய்கறிகளை உட்கொள்வது நன்மை பயக்கும். இதில் கலோரிகள் குறைவாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ளது. இன்சுலினை சுரக்கச் செய்து இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைப்பதில் மிகவும் நன்மை பயக்கும். உடல் பருமன் மற்றும் கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் வெண்டைக்காய் மிக பயனுள்ளது என்பது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் சல்போராபேன் அதிகம் உள்ளது. எனவே, ப்ரோக்கோலியை உட்கொள்வது உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உடலின் கல்லீரல் செல்களில் குளுக்கோஸ் மற்றும் கிளைகேட்டட் ஹீமோகுளோபினைக் குறைப்பதில் சல்போராபேன் நன்மை பயக்கும்.

கீரை

கீரை சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. இரும்பு சத்து, கால்ஷியம் சத்து நிறைந்த கீரை இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதாக உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, இந்த நோயாளிகள் தங்கள் உணவில் கீரையை சேர்க்க வேண்டும்.

பாகற்காய்

பாகற்காய் நீரிழிவு நோய்க்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கு தெரியும். இது இன்சுலின் போன்று செயல்படும். நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதன் காரணமாக, இவை சிறப்பாக செயல்படும். இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

கேரட்

கேரட் சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்று. கேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனால், வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். அடிக்கடி பசிக்காது. எனவே சர்க்கரை நோயாளிகள் கேரட்டை உட்கொள்ள வேண்டும்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content