இந்தியா

இந்தியாவிலும் அமுலுக்கு வரும் சமூக ஊடகத் தடை?

இந்தியாவில் 16 வயதுக்குட்பட்ட தனிநபர்களுக்கான சமூக ஊடகங்களைத் தடை செய்வது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமூக ஊடக தளங்களால் சுமார் 12 மில்லியன் சிறார்கள் பாதிக்கப்படுவதாக கணக்கெடுப்பொன்றில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கோவா ஆகிய மூன்று இந்திய மாநிலங்களில் குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான விதிகளை அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆளும் பாஜகவின் முக்கிய கூட்டாளியான ஒருவர், 16 வயதுக்குட்பட்ட எவரும் சமூக ஊடகக் கணக்கை உருவாக்குவதையோ அல்லது பராமரிப்பதையோ தடைசெய்யும் நாடு தழுவிய சட்டமூலம் ஒன்றை முன்மொழிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் வயது அடிப்படையிலான அணுகல் வரம்புகள் மற்றும் நாட்டின் பெரிய இணைய பயனர் தளத்தைக் கருத்தில் கொண்டு, வயது சரிபார்ப்பை அமல்படுத்துவதற்கு தளங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!